2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதார அமைச்சில் கடமைகளை நிறைவேற்றும் போது பொது மக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை புலனாய்வு செய்தல் - பொது மக்களுக்கு வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான சுகாதார சேவையொன்றை வழங்கும் நோக்கத்துடனும் சுகாதார அமைச்சினாலும் அதன் கீழுள்ள நிறுவனங்களினாலும் வழங்கப்பட்ட சேவைகள் சம்பந்தமாக பொது மக்கள் திருப்தியுறாமலும் கஷ்டங்களுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களில் பொது மக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் பற்றி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சேவை புரிந்துகொண்டிருக்கும் அல்லது இளைப்பாறிய நிபுணத்துவ மருத்துவ உத்தியோகத்தர்கள் சிரேட்ட மருத்துவ நிருவாக உத்தியோகத்தர்கள் இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த சிரேட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழாமொன்றை உருவாக்குவதற்கும் அத்தகைய சந்தர்ப்பங்களில் இந்த உத்தியோகத்தர்கள் குழாமிலிருந்து புலனாய்வுக் குழுக்களை நியமிப்பதற்காகவும் சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |