• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்தினால் வழங்கப்படும் 147 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்

- அரசாங்க பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பு 2020 ஆம் ஆண்டளவில் நாடுபூராவும் உள்ள நகர வலயமைப்புகளை மிகத்திருப்திகரமாக திட்டமிட்டு தொடர்புபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள பாரிய நகரங்களான கொழும்பு, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களை அரசாங்கம் இனங் கண்டுள்ளது. முழுநாடும் தழுவக்கூடியவாறு வேறு 09 நகரங்களும் நகர அபிவிருத்தி நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. மேற்போந்த கருத் திட்டத்திற்கு 147 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகை யொன்றை வழங்குவதற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயம் ஒத்துக்கொண்டுள்ளது. இதற்காக இந்த சமவாயத்துடன் கடன் தொடர்பிலான இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் நிதி உடன்படிக்கைகளை மேற்கொள் வதற்கும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.