2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அவசர காகலநிலை அனர்த்தங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு உலக வங்கியின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சருவதேச வங்கியிடமிருந்து 102 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்தொகை யொன்றைப் பெற்றுக் கொள்ளல் - விசேடமான காலநிலை மாற்றங்கள் காரணத்தினால் கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கை வெள்ளம், மண்சரிவு மற்றும் புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகமாக முகங்கொடுக்கின்ற நாடாகவுள்ளது. உலக வங்கியின் புனரமைப்புக்கும் அபிவிருத்திக்குமான சருவதேச வங்கியினால் இதன் நிதி முறைமைகளின் ஊடாக இயற்கை அனர்த்தங்களின் பின்னர், இந்த நிதியங்களை துரிதமாக பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும். மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக 102 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஒத்துக்கொண்டுள்ளதுடன், தேசிய அனர்த்தங்களின் போது இந்த நிதியத்தைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உருவாகும். இதற்கான இணக்கப்பேச்சுகளையும் நிதி உடன்படிக்கைகளையும் செய்து கொள்வதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராகிய அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |