• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
க.பொ.த.(உ/த) இல் புதிய தொழினுட்ப பாடப் பிரிவினை அறிமுகப்படுத்துதலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு தேவையான மனித வளங்களை வழங்குதலும்

- இந்த புதிய பாடவிதானம் 2013 கல்வி ஆண்டு சார்பில் 200 மஹிந்தோதய தொழினுட்ப பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், தற்பொழுது 13,100 மாணவர்கள் இந்த பாடவிதானத்தை கற்கின்றனர். இதற்கு மாணவர்களின் கோரிக்கைகள் அதிகரித்துள்ளதன் மீது இந்த பாடசாலைகளின் எண்ணிக்கை 250 வரை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதனால், இயைபுள்ள பாடங்களை கற்பிப்பதற்குத் தேவையான தகைமைகளைக் கொண்டுள்ள 150 ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.