2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் சுகாதாரக் கல்வியை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் சருவதேச ஆதாரமன்றத்துடன் ஒத்துழைத்தல் - இது இலங்கையின் சுகாதார கல்வியை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சும் கொழும்பு பல்கலைக்கழகமும் இணைந்து சிங்கப்பூர் சருவதேச ஆதார மன்றத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற மூன்று (03) வருடகால கருத்திட்டமொன்றாகும். இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமானது இலங்கையின் சுகாதாரச் கல்வி, தேசிய மற்றும் நிறுவன ரீதியிலான இரண்டு மட்டங்களையும் உயர் நிலைக்கு கொண்டுவருவதாகும். மேற்போந்த நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த கருத்திட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |