• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமூக ஒருங்கிணைப்பு மற்றும் மாற்றத்தை இலகுபடுத்தல் கருத் திட்டத்திற்கான புதிய கட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் சார்பில் ஜேர்மன் பெடரல் குடியரசிடமிருந்து 2.5 மில்லியன் யூரோக்களைக் கொண்ட கொடையொன்றை பெற்றுக் கொள்ளல்.

- ஜேர்மன் பெடரல் குடியரசின் கொடையொன்றின் கீழ் மேற்போந்த நிகழ்ச்சித் திட்டத்தின் சில கட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்தக் கருத்திட்டத்தின் இறுதிக் கட்டத்தின் மூலம் உள்ளூராட்சி நிறுவனங்களின் திறனை விருத்தி செய்வதற்கும் அபிவிருத்திப் பணிகளில் பொது மக்களின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமூக ஒருங்கிணைப்பிற்கான தேசிய கொள்கைக் கட்டமைப்பின் சிபாரிசுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு விசேடமாக சமூக ஒருங்கிணைப்பிற்கான பிரதான தேசிய திட்டமொன்றை அபிவிருத்தி செய்வதற்கும் அதனோடு இணைந்த செயற்பாடுகளுக்கும் 2.5 மில்லியன் யூரோக்கள் பெறுமதி வாய்ந்த தொழினுட்ப ஒத்துழைப்பை மேலும் பெற்றுக் கொள்வதற்கு ஜேர்மன் அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.