2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆபிரிக்க ஒன்றியத்திற்குள் இலங்கைக்கு ஒப்புதல் அளித்தல் - ஆபிரிக்க நாடுகளுக்கிடையில் ஐக்கியத்தையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்புக்குள் சருவதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் உறுப்பாண்மை நாடுகளுக்கிடையிலான சுயாட்சியையும், இறைமையையும் பாதுகாப்பதற்காகவும் 1999 ஆம் ஆண்டு ஆபிரிக்க ஒன்றியம் தாபிக்கப்பட்டது. இந்த ஆபிரிக்க ஒன்றியமானது 54 ஆபிரிக்க நாடுகளைக் கொண்டுள்ளது. தற்பொழுது ஆபிரிக்காவைச் சாராத 72 க்கும் அதிகமாக நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஆசிய நாடுகளுக்கிடையே யப்பான், சீனா, கொரியக் குடியரசு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன. ஆபிரிக்க ஒன்றியத்திற்குள் இலங்கைக்கு ஒப்புதல் அளிக்கும் நிலையைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |