2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் கிராமிய பாலங்களின் நிருமாணிப்பு - கட்டம் II - கிராமிய பாலங்கள் நிகழ்ச்சித் திட்டம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 210 பாலங்களின் நிருமாணிப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் நடைபாதை பாலங்கள் மற்றும் ஆட்கள், சரக்குகள் ஏற்றிச் செல்லப்படும் கடவைகள் என்பனவற்றுக்குப் பதிலாக இந்தப் பாலங்கள் பயன்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் அண்ணளவாக 120,000 குடும்பங்கள் நன்மையடைவதுடன், கட்டம் II இன் கீழ் 537 கிராமிய பாலங்கள் நிருமாணிக்கப்படவுள்ளன. இந்தக் கருத்திட்டத்திற்காக ஐக்கிய இராச்சிய அரசு ஐக்கிய இராச்சிய டச் வங்கியுடன் இணைந்து 100 சதவீத நிதி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |