2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய எல்லைகளை மீறிய குற்றங்களை தடுத்தல், பொலிஸ் ஒத்துழைப்பை விருத்தி செய்தல் தொடர்பில் இலங்கை பொலிசுக்கும் மாலைத்தீவு பொலிஸ் சேவைக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடல் - இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் முக்கிய நோக்கமானது பயங்கரவாதம், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை, மனித வணிகம், கறுப்பு பணங்களை சட்டபூர்வமானதாக்குதல் போன்ற எல்லைகள் மீறிய குற்றங்களைப் பற்றி ஆராய்வதும் முன்னுரிமைப்படுத்துவதுமாகும். பிரேரிக்கப்பட்டுள்ளவாறு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு சட்டம், மற்றும் ஒழுங்கு பற்றிய அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |