• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆட்டநிர்ணய சூதாட்டங்களைத் தடுக்கும் சட்டம்

- அண்மைக் காலமாக விளையாட்டுத்துறையில் ஏற்பட்ட சம்பவங்கள், அதாவது கிரிக்கட், உதைபந்தாட்டம், றகர் போன்ற விளையாட்டுத்துறையில் சில நாடுகளின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளினால் பணத்திற்காக ஆட்டநிர்ணய சூதாட்டங்களில் ஈடுபடுவதும் இதன்மூலம் நாட்டுக்கும் வீரர் வீராங்கனைகளுக்கும் ஏற்படுகின்ற பாதிப்புகளைக் கவனத்திற் எடுத்துக்கொண்டு ஆட்ட நிர்ணய சூதாட்டங்களைத் தடுப்பதற்கு சட்டமூலமொன்றை ஆக்குவதற்காக சட்டவரைநருக்கு அறிவுறுத்தும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.