• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரவளை புதிய வசுத்தரிப்பிட நிருமாணிப்புக்காக புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்றுதல்

- வெலிமடை, எட்டம்பிட்டிய, வெல்லவாய, கொஸ்லந்த, அப்புத்தளை, தியத்தலாவ, எல்ல, தேமோதர போன்ற பிராந்திய நகரங்களுக்கு பிரதான சேவைகள் வழங்கும் மையமாக பண்டாரவளை நகரம் விளங்குகின்றது. புகையிரத திணைக்களத்தினால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு விடுவிக்கப்படவுள்ள காணித் துண்டில் புதிய வசுத்தரிப்பிடக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டங்கள் வகுத்தமைக்கப்பட்டுள்ளன. இந்த நோக்கத்திற்குரியதான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.