2014-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம் - கண்டி நகரத்தின் வாகன நெரிசல்களுக்குத் தீர்வு காண்பதற்காக போக்குவரத்து முறையை மேம்படுத்தும் திட்டத்துடன் காலி மற்றும் கண்டி நகரங்களுக்கான திறமுறை அபிவிருத்தி திட்டங்களை வகுத்தமைப்பது இந்தக் கருத்திட்டத்தின் முக்கிய தேவையாக இனங்காணப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக திறமுறை அபிவிருத்தித் திட்டங்களை வகுத்தமைப்பதற்கும், சுற்றாடல்சார் கற்கைகளை மேற்கொள்வதற்கும் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊடாக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்மாக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |