2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தற்போது நிலவும் வரட்சி காரணமாக நீர் வழங்கலின்பால் உள்ள பாதிப்பு - தற்போது நிலவும் வரட்சி காரணமாக நாட்டின் முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நிலைமை பற்றி நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சராகிய மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதோடு, ஆறுகளிலும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றமையினால், வரட்சி தொடர்ந்தும் நிலவுமாயின் எதிர்வரும் காலங்களில் நீர்வழங்கலை மட்டுப்படுத்த வேண்டி வருமெனக் குறிப்பிட்டார். |