2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காலநிலை பாதிப்புகளை குறைக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்தினால் வழங்கப்படும் 110 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் - இலங்கை பாரிய அளவில் பல்வேறுபட்ட அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடொன் றாகையினால் இலங்கை அரசாங்கம் அதன் அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் காலநிலை மாற்றம் சம்பந்தமாக முன்னரிமை வழங்கி அவசர நிலைமைகளுக்கு தயார்நிலையிலும் எதிர்விளைவினைக் காட்டும் ஆற்றலும் தொடர்பில் கூடிய முதலீடுகளைச் செய்வதோடு, அனர்த்த எச்சரிக்கை முகாமைத்தும் தொடர்பில் சட்ட மற்றும் நிறவனத் திட்டங்களை பலப்படுத்துவதன் பால் விசேட நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இந்த காலநிலைப் பாதிப்புகளைக் குறைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்துவதற்காக 110 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்திக்கான சமவாயம் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |