2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கும் தெற்காசிய கல்வி நிறுவனத்துக்கும் இலங்கை சருவதேச உறவுகள் மற்றும் திறமுறைக் கல்விக்கான லக்ஷமன் கதிர்காமர் நிறுவவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை - பரஸ்பரம் ஊக்கமுள்ள கூட்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேம்படுத்துவது இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும். சருவதேச உறவுகள் மற்றும் திறமுறைக் கல்விக்கான லக்ஷமன் கதிர்காமர் நிறுவவனத்துக்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கும் தெற்காசிய கல்வி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |