• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - கட்டம் II படிநிலை 2 - வடிவமைப்பும் வடிவமைப்பின் பின்னரான மேற்பார்வை மதியுரைச் சேவையும்

- 2009 ஆம் ஆண்டில் சமாதானம் மலர்ந்தவுடன் பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் பிரயாணிகளின் நடமாட்டம் 15 சதவீதத்தால் உயர்ந்ததோடு, 2013 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் மூலம் 7 மில்லியன் பிரயாணிகள் தொடர்புபட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை கவனத்திற் கொள்ளப்பட்டது. பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கட்டம் II படிநிலை 2 முடிவடைந்ததன் பின்னர் பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் மொத்த பிரயாணிகளின் செயற்பாட்டு ஆற்றல் ஆண்டொன்றில் 15 மில்லியனை மிஞ்சுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்போந்த கருத்திட்டத்திற்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.