2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிலிப்பைன்ஸ், மணிலா நகரத்தில் நடாத்தப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் மனித வணிகத்தை தடுப்பதற்கான தென்-கிழக்கு ஆசிய உபவலய பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் - சனத்தொகை மற்றும் அபிவிருத்தி பற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசிய அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரினால் செய்யப்பட்ட அழைப்பின் பேரில் சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். ஆசிய பசுபிக் வலயத்தின் பாரளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து தென் - கிழக்கு ஆசியாவின் மனித வணிகம் தொடர்பிலான பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடுவதற்கும் இந்த விடயம் தொடர்பில் தமக்கிடையே உள்ள அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்குவது இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும். மேற்போந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளினால் நாட்டில் மனித வணிகத்திற்கு எதிராகப் போராடும்போது இலங்கை அடைந்துள்ள வெற்றி மெச்சப்பட்டதோடு, பால் வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்ட வன்முறையை ஒழிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளும்கூட அவர்களினால் மெச்சப்பட்டது. சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. |