2014-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆற்றல் துறையை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி - ஆற்றல் துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கேள்வியை ஈடுசெய்வதற்கு இயலுமான வினைத்திறன்மிக்க ஆற்றல் கல்வி முறையொன்றை தாபிப்பது இதன் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டதின் மூலம் உலக பொருளாதார கேள்வியை ஈடுசெய்வதற்கு இயலுமாகும் வகையில் இளைஞர்களின் ஆற்றல், தேர்ச்சி மற்றும் திறமை மேம்படுத்தப்படுவதோடு, அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நாட்டினைக் கொண்டு செல்கையில் இது உந்துசக்தியாய் அமையும். ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த நோக்கத்திற்காக 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |