• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய அதிவேகப் பாதை அதிகாரசபையொன்றைத் தாபித்தல்

- வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அதிவேகப் பாதை மற்றும் அதுசார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதும் இங்கு கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ளதுமான அதிவேகப் பாதைகளின் தொழிற்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவம் அத்துடன் பின்வரும் புதிய கருத்திட்டங்களைக் கூடிய விரைவில் திட்டமிடுதல், நிருமாணித்தல் இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்காக தேசிய அதிவேகப் பாதை அதிகாரசபையொன்றைத் தாபிப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* ஏற்கனவே செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொட்டாவையிலிருந்து பின்னதூவ வரையிலான தெற்கு அதிவேகப்பாதை மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப்பாதை;

* 2014 மார்ச் மாத்தில் திறக்கப்படவுள்ள கொட்டாவையிலிருந்து கடுவெல வரையிலான சுற்றுவட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மற்றும் பின்னதூவையிலிருந்து மாத்தறை வரையிலான தெற்கு அதிவேகப்பாதையின் ஒரு பகுதி; அத்துடன்

* எண்டேரமுல்லையிலிருந்து தம்புள்ளை மற்றும் கண்டி வரையிலான வடக்கு அதிவேகப்பாதை, மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலான தெற்கு அதிவேகப்பாதை நீடிப்பு மற்று இங்கிரியவிலிருந்து இரத்தினபுரி வரையிலான அதிவேகப்பாதையொன்றை நிருமாணிப் பதற்கான கருத்திட்டம்.