• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டையை பாதுகாத்தல்

- யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டை 1690 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர்களினால் நிருமாணிக்கப்பட்டுள்ளதோடு, தொல்பொருளியல் திணைக்களத்தினால் நெதர்லாந்து அரசாங்கத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும் நிதியுதவியுடன் 2009 ஆம் ஆண்டில் இதனை பாதுகாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ஆரம்பித்து எதிர்வரும் 4 ஆண்டுகளினுள் 200 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் இதனைப் பாதுகாப்பதற்கான மீதிப் பணிகளை பூர்த்தி செய்வதற்காக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) ஜகத் பாலசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.