2014-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
998 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை தேசிய நீர்வள மூலங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 37 ஆம் பிரிவின் (2) ஆம் உபபிரிவின் (இ) ஆம் பந்தியின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்ட நீர்வளமூலங்கள் முகாமைத்துவ கட்டளைகள் - மேற்போந்த கட்டளையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ராஜித்த சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தக் கட்டளைகளின் மூலம் உரிமப்பத்திரம் பெற்றுக் கொள்ளாமல் நீர்வளமூலங்கள் வளர்ப்புப் பணிகள் தடைசெய்யப்படுவதோடு, இந்த கட்டளைகளின் மூலம் பரிசோதனைக் கட்டணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. |