2014-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஜனசெவன தேசிய வீடமைப்பு, அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாராஹேன்பிட்ட, சித்ரா ஒழுங்கை, அண்டரஷன்வத்த ஆகிய காணிகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர்களுக்காக நிருமாணிக்கும் பொருட்டு பிரேரிக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீட்டு கருத்திட்டம் - சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர்களுக்காக சித்ரா ஒழுங்கையில் 55 வீட்டு அலகுகள் கொண்ட பல்மாடிக் கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர்களுக்காக கூடிய இடவசதியினை வழங்குவதற்காக 80 வீட்டு அலகுகள் வரை அதிகரிப்பதற்கும் மாடிகளை 12 இலிருந்து 20 ஆக அதிகரிப்பதற்குமாக நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |