2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கென்ய குடியரசுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் - கென்ய குடியரசின் அதிமேதகைய சனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கையின் அதிமேதகைய சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இரு தலைவர்களுக்கிடையே நிலவிய இருபக்க கலந்துரையாடல்களின் போது பரஸ்பரம் முக்கிய விடயங்கள் தழுவப்படும் விதத்தில் கலந்துரையாடப்பட்டன. இந்த உத்தியோகபூர்வ விஜயம் இரண்டு நாடுகளுக்குமிடையில் நிலவும் நீண்டகால உறவை உறுதிப்படுத்துவதற்கும் பொதுவான நோக்கில் நுழைவதற்கும் பரஸ்பர செளபாக்கியம் தொடர்பிலான புதிய மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் நெருங்கிய உறவுகளை விருத்தி செய்து கொள்வதற்கு கிடைத்த விசேட வாய்ப்பொன்றாக இருதலைவர்களும் உடன்பட்டனர். இருநாடுகளுக்கும் இடையிலான இருபக்க உறவுகளை விருத்தி செய்வதற்கும் அவதானிப்பதற்கும் மதிப்பிடுவதற்குமான ஆரம்ப தாபனமொன்றாக "ஒத்துழைப்புக்கான கென்யா - இலங்கை கூட்டிணைந்த ஆணைக்குழு" தாபிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |