2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1000 ம் கிராமிய பாலங்கள் நிருமாணிப்புக் கருத்திட்டம் - கிராமிய பிரதேசங்களின் போக்குவரத்து தொடர்புகளை உருவாக்குவதற்காக 1000 ம் கிராமிய பாலங்கள் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் தூர பிரதேசங்களிலுள்ள பெரும்பாலான கிராமங்களிலுள்ள கிராமவாசிகளுக்கு சந்ததை, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை இலகுவாகப் பெறுவதற்கு இயலுமாகும். இந்த நோக்கத்திற்காக வெளிநாட்டு வங்கிகளுடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்துகொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |