• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிக் கடன் தொகைகளை பயன்படுத்தி முன்னுரிமை வீதிகளைப் புனரமைத்தல்

- உள்நாட்டு வங்கி கடன்தொகைளின் மூலம் பின்வரும் வீதிப் பகுதிகளை புனரமைப்பதற்கும் விரித்தி செய்வதற்குமான அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இயைபுள்ள உள்நாட்டு வங்கிகளுடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* வத்தளை – மஹர வீதி (B 460) (கி.மீ.0-7.24) ;
* அம்பலாங்கொட – எல்பிட்டிய – பிட்டிகல வீதி (B 14) (கி.மீ.16-23 -29.36) ;
அத்துடன்
* மதவாச்சிய – ஹொரவபொத்தான வீதி (B 282) (கி.மீ.0.00 - 10.00 கி.மீ)
* ஹெந்தலை - ஹூணுபிட்டிய வீதி (B 151) (கி.மீ.0.00 - 4.02)