2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புற்றுநோய் காவறை கட்டட தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II - மட்டக்களப்பு போதனா மருத்துவசாலை - கிழக்கு மாகாணத்தின் முதன்மை மருத்துவமனையானது மட்டக்களப்பு போதனா மருத்துவசாலையாகும். இந்த மருத்துவசாலையில் புற்றுநோய் காவறை கட்டடத் தொகுதியின் I ஆம் கட்டத்தின் நிருமாணிப்பு பணிகள் அரசாங்க நிறுவனமொன்றான மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்கப்பட்டதோடு, தற்போது அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்திற்கான நிருமாணிப்பு வேலைகளுக்கான ஒப்பந்தத்தையும் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |