2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உரித்துப் பதிவுச் சட்டம் - காணி, காணி அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் முன்னுரிமை நிகழ்ச்சித் திட்டமாவது மேற்போந்த சட்ட ஏற்பாடுகளுக்கமைவாக செயற்படுத்தப்படும் உரித்துப் பதிவு (பிம்சவிய) நிகழ்ச்சித்திட்டமாகும். மேற்போந்த சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது எழுந்த பிரச்சினைகளை கண்டறிவதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட விசேடகுழுவொன்றின் சிபாரிசின் மீது இந்த சட்டத்திற்கு சில திருத்தங்களைச் செய்வதற்காகவும் பொதுமக்களின் நலனின் பொருட்டும் இதற்கமைவாக சட்ட திருத்தங்களை ஆக்குமாறு சட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்காகவும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |