• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிப்பழக்கமற்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2014

- விசேடமாக எமது நாட்டில் இளைஞர்களும் எதிர்கால சந்ததியினரும் ஹெரோயின், மதுசாரம், புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் பாதுகாத்துக் கொள்வது தேசிய ரீதியில் முன்னுரிமை விடயமொன்றென கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குடிபழக்கமற்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக சகல அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடனும் சமூக பங்களிப்புடனும் தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கலந்துரையாடலுக்குப் பின்னர், சிரேட் உத்தியோகத்தர்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றின் ஒத்தாசை பெறப்படும் அதிமேதகை சனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் சுகாதார அமைச்சரவையும் இயைபுள்ள ஏனைய அமைச்சர்களையும் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.