• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமக்காரர் ஓய்வூதியத்தையும் சமூக பாதுகாப்பு நன்மைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துதல்

- 1987 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க கமக்காரர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நன்மைத் திட்ட சட்டத்தின் கீழ் கமத்தொழில் மற்றும் கமக்காரர் காப்புறுதி சபையின் மூலம் இந்த பிரேரிப்புகள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு பங்களிப்புச் செய்துள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 959,254 பேர்களாவதோடு, 2014 சனவரி மாதம் 01 ஆம் திகதியன்று ஓய்வூதிய நல உரிமையைப் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 128,659 ஆகும். 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கமைவாக கமக்காரர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறாகும்:

* புதிய ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக 64 வயதில் மாதாந்தம் முறையே 1,250/- ரூபா ஆகக் குறைவாகவும் 5,000/- ரூபா உச்சமாகவும் வழங்குவதற்கு உட்பட்டு, இளைப்பாறிய கமக்காரர் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை கொடுப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்;
* தொடக்கத்தில் 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளதோடு, அடுத்துவரும் சில ஆண்டுகளினுள் வருடாந்தம் ஒதுக்கப்படுவதற்கும்;
* கமக்காரர்களின் பங்களிப்புகளின் மூலம் கமக்காரர் ஓய்வூதிய நிதியத்தை நிலையாகவும் நீண்டகாலம் நடாத்திச் செல்வதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும்;
* பழைய கமக்காரர் ஓய்வூதிய திட்டத்துக்குப் பங்களிப்பு செய்தவர்களை புதிய திட்டத்திற்குள் உள்ளீர்த்து ஓய்வூதியம் வழங்குவதற்கும்; அத்துடன்
* வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த திருத்தத்தை சட்டபூர்வமானதாக்குவதற்கும்.

இது சம்பந்தமாக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.