• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிகளின் கடன் தொகைகளை பயன்படுத்தி முன்னுரிமை பாதைகளை புனரமைப்புச் செய்தல்

- உள்நாட்டு வங்கிகளின் கடன்தொகைகளை பயன்படுத்தி பின்வரும் முன்னுரிமை வீதிகளை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது:

* கிரிந்த – பலட்டுபான – யால வீதி (B 499) (கி.மீ.0-12.50) ;
* தல்கொடபிட்டிய – யட்டவத்த – தொம்பவெல வீதி (B 409) (கி.மீ.0-26.40) ; அத்துடன்
* பசறை – மொனராகலை வீதி (A 22) (கி.மீ.0-27.0)

இந்த நோக்கத்திற்காக இயைபுள்ள உள்நாட்டு வங்கிகளுடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.