2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு கட்டடமொன்றை நிருமாணித்தல் - பிரதேசவாழ் மக்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு மூன்று (03) மாடிக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கும் இதற்குரிய பணிகளை மேற்கொள்வதற்குமாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |