• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியின் கீழ் வடக்கு இணைப்புக் கருத்திட்டம் (மாகாண ஆக்கக்கூறு) - மேலதிக நிதி ஏற்பாட்டின் மூலம் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் சிவில் ஒப்பந்தங்களை மேற்பார்வை செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் மதியுரை ஒப்பந்தத்தை வழங்குதல்

- வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தேசிய மற்றும் மாகாண வீதிகளை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்போந்த மதியுரை ஒப்பந்தத்தின் நோக்கம் இவ்விரு மாகாணங்களிலும் மாகாண வீதிகளை நிருமாணித்தலும் தொழில்சார் மேற்பார்வைக்கு உட்படுத்தி ஒப்பந்த நியதிகளின் பிரகாரம் அவை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துவதாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.