2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி கருத்திட்டம் - கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்ட நோக்கத்தி்ன் மீது கொழும்பு துறைமுகத்தை விரிவுப்படுத்தும் கருத்திட்டத்தின் அணைகரைக்கு அண்மையில் காலிமுகத்திடலை நோக்கி 233 ஹெக்டயார் நிரப்பப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகம் கேந்திர நகரமொன்றாக கட்டியெழுப்புவதற்கு இந்தக் கருத்திட்டத்தின் ஊடாக புதிய நகரமொன்று நிருமாணிக்கப்படும். பிரேரிக்கப்பட்டடுள்ள நகரத்தில் சொகுசு ஹோட்டல்கள், வீடமைப்புத் தொகுதிகள், கடைத்தொகுதிகள், கலாசார பிரிவுகள் ஆகியன நவீன கட்டடங்களையும் கலியாட்ட இடங்களையும் கொண்டிருக்கும். இதன் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |