2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிய பொலிஸ் நிலைய கட்டடங்களை நிருமாணிக்கும் விசேட கருத்திட்டங்களின் கீழ் மாதிரி பொலிஸ் நிலையக் கட்டடங்களை நிருமாணித்தல் 2014/2016 – இந்தக் கருத்திட்டத்தின் கீழ் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்குள் 6,367 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் நிலவும் 26 பொலிஸ் நிலையங்கள், 07 பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகங்கள், 04 விடுதிகள் ஆகியன உட்பட 39 கட்டடங்கள் நிருமாணிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு பற்றிய அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |