2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நாட்டில் நிலவும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் - கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2013 ஆம் ஆண்டில் பல ஆசிய நாடுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளமை அறிக்கையிடப்பட்டுள்ளது டெங்கு நோயானது தொடர்ந்தும் இலங்கைக்குச் சவாலாகவுள்ள சுகாதார பிரச்சினையாக இருந்தாலும், சுகாதார அமைச்சினால் மாகாண அதிகாரபீடங்களுடனும் ஏனைய நிறுவனங்களுடனும் இணைந்து முன்நோய் நிர்ணயிப்பு மூலமும் நோய் பரவும் நிலைமை வரை அதிகரிக்கும் நிலைமைக்குத் துரிதமாக எதிர்விளைவுகளை எடுப்பதன் மூலமும் டெங்கு நோய் பரவுவதன் மூலம் நிகழக்கூடிய பிரதிகூலமான பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2012 ஆம் ஆண்டு அறிக்கையிடப்பட்ட 40,823 டெங்கு நோயாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் குறித்த ஆண்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 27,991 பேர்களாக அதாவது 32 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதோடு, 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 168 மரணங்களுடன் ஒப்பிடும் போது, 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 78 ஆக குறைந்துள்ளது. சுகாதார அமைச்சினால் அதிமேதகைய சனாதிபதியின் வழிகாட்டலின் கீழும் சனாதிபதியின் செயலணியினதும் மற்றும் ஏனைய தரப்பினர்களினதும் ஒத்துழைப்புடனும் டெங்கு நோயை ஒழிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுள் சில பின்வருமாறாகும்: |