2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் நிலப்பகுதி துறைமுகங்களை தாபித்தல் - பேலியகொட, தெலங்கபாத்த பிரதேசங்களில் இரண்டு நிலப்பகுதி துறைமுகங்களைத் தாபிப்பதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளதோடு, நிலப்பகுதி துறைமுக வலயத்திற்காக 100 ஏக்கர் காணியும் இனங்காணப்பட்டுள்ளது. இதில் முதலில் அபிவிருத்தி செய்யப்படுவது 30 ஏக்கர்களாகும். கடல் முடிவிடத்துடன் இணையும் தேவை உள்ளக துறைமுகங்களுக்கு இருப்பதோடு, துறைமுகங்களுக்கு வரும் மற்றும் வெளியேறும் கப்பல்களுக்கு உள்ளூர் சந்தைக்கு மிக வினைத்திறமையான நுழைவினை இது வழங்கும். இதற்கமைவாக நிலப்பகுதி துறைமுகங்கள் தொடர்பிலான அரசாங்கங்களுக்கிடையிலான தரப்பினர் ஒருவராவதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திடுவதற்கு நியூயோர்க் நகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை நிரந்தர பிரதிநிதிக்கு அதிகாரத்தை கையளிப்பதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |