• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொனறாகலை - புத்தள நீர் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கான நிதியுதவி

-  மொனறாகலை - புத்தள நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 43 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தழுவப்படும் விதத்தில் 50,000ம் குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கப்படவுள்ளது.  இந்தக் கருத்திட்டத்தின் பெரும் பகுதியைத் தழுவுவதற்காக 12,996,578.95 யூரோக்களைக் கொண்ட கடன் தொகையொன்றை வழங்குவதற்கு பெல்ஜியத்தின் KBC வங்கி உடன்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் மீதி பகுதிக்கான நிதியிடுகைக்கு ஹட்டன் நஷனல் வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் இந்தக் கருத்திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதற்கு இந்த கடன் தொகையிலிருந்து கிடைக்கும் தொகையை தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு மீள் கடனாக வழங்குவதற்கும்  நிதி, திட்டமிடல் அமைச்சராக  அதிமேதகைய சனாதிபதி   அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.