2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை - ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு அரசாங்கம் எண்ணுவதாக இலத்திரன் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான பல்வேறுபட்ட செய்திகள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது. அமைச்சரவையினால் இத்தகைய எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாமை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆயினும், நடைமுறையிலுள்ள பரீட்சை முறை காரணமாக மாணவர்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள கடும் தாக்கம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த பரீட்சையை இலகுபடுத்துவது அரசாங்கத்தின் கருத்தாகும். புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தும் முறையில் ஏதேனும் மாற்றமொன்றை செய்வது பற்றி தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டும் இது தொடர்பில் ஊக்கமுள்ள ஏனைய தரப்பினர்களுடன் உசாவுதலைச் செய்ததன் பின்னர் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. |