• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதுளை மாவட்ட செயலகத்துக்கு உத்தியோகபூர்வ வீடமைப்பு தொகுதியொன்றை நிருமாணித்தல்

- பதுளை மாவட்டம் 15 பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் மொத்த சனத்தொகை 811,758  ஆகும். 57.4 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவு மதிப்பீட்டின் மீது பதுளை மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ வீடமைப்பு தொகுதியொன்றை நிருமாணிப்பதற்காக  பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.