• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக காணியொன்றைக் கொள்வனவு செய்தல்

- .மொரட்டுவை  பல்கலைக்கழகம் பொறியியல் , தகவல் தொழினுட்பம்,  கட்டடக்கலை ஆகிய மூன்று பீடங்களை கொண்டுள்ளதோடு, 2011 – 2012 கல்வி ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1,747 ஆகும். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பதவியினர்களுக்கும் கூடுதலான தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக மொரட்டுவை கட்டுபெத்தையில் பிரேரிக்கப்பட்டுள்ள காணியை கொள்வனவு செய்வதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.