2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2013 ஒக்ரோபர் மாதம் 15-17 வரை தென்ஆபிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற மொழி மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான மாநாடு - தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதோடு, இந்த மாநாட்டின் நிகழ்வுகள் மற்றும் இலங்கை பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பிரதிநிதித்துவமும் பற்றி மாண்புமிகு அமைச்சரினால் அமைச்சரவைக்கு எடுத்துக் கூறப்பட்டது. தென் ஆபிரிக்காவில் ஆரம்பகல்வி இலவசமாக வழங்கப்படுகின்றமையும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மாத்திரம் இரண்டாம் நிலைக் கல்வி இவ்வாறு இலவசமாக வழங்கப்படுகின்றமையும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மும்மொழிகளிலும் கல்வியை கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை வழங்கும் கல்வி முறை தொடர்பிலும் இவை இலவசமாக வழங்குவது தொடர்பிலும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் பராட்டுதல்களுக்கு உட்பட்டமை பற்றியும் அமைச்சரினால் குறிப்பிடப்பட்டது. |