• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர வன கேந்திர கருத்திட்டம் - ஜயவர்தனபுர கோட்டை

-  "Reflection of Sri Lanka"  கண்காட்சி நடாத்தப்பட்ட பத்தரமுல்லையிலுள்ள சுமார் 11 ஏக்கர் விஸ்தீரணமுடைய நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியை, இந்த பிரதேசத்தின் புவியியல் அமைவுக்கு எவ்வித பிரதிகூலமான பாதிப்பும் ஏற்படாதவாறு உள்நாட்டு, வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகளுக்கான நகர வன கேந்திர நிலையமொன்றாக அபிவிருத்தி செய்வதற்காகவும் இதற்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ  அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.