2014-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளல் மற்றும் விசா பெற்றுக் கொள்ளல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களையும் அதற்குரியதான ஆவணங்களையும் ஸ்கான் பண்ணுதலும் மின்னணு களஞ்சியப்படுத்துகையும் - இரட்டைக் குடியுரிமை பெறல், வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளைப் பதிவு செய்தல், விசா பெற்றுக் கொள்வதற்கான தொடர்பு ஆவணங்கள் என்பவற்றுடனான விண்ணப்பங்கள் பெரும் எண்ணிக்கையில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைக்கின்றமையினால், குடியுரிமை மற்றும விசா உட்பட இவற்றுடன் தொடர்புபட்ட இத்தகைய விண்ணப்பங்களையும், ஆவணங்களையும் மின்னணு முறையில் ஆவணப்படுத்தி பாதுகாப்பதற்கான கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விசா மற்றும் குடியுரிமை வழங்கும் செயற்பாட்டினைப் பலப்படுத்தும், ஆவண முகாமைத்துவ வகைமுறையை மேம்படுத்தும் வசதிகளும் கிடைக்கும். இந்தக் கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |