• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒருங்கிணைந்த நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்

- இலங்கை போக்குவரத்து சபையினாலும் தனியார் வசுவண்டி உரிமையாளர்களினாலும் நாடு பூராவும் ஆறு மில்லியன் பயணிகளின் போக்குவரத்துக்காக முறையே 4,314 மற்றும் 17,129 வசுவண்டிகள் நாளாந்தம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வசுவண்டிகள் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படாமையினால் பயணிகளுக்கு பல கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. 2014‑01‑15 ஆம் திகதியிலிருந்து பயணிகளுக்கு மிகச்சிறந்த போக்குவரத்துச் சேவையினை வழங்குவதற்காகவும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் வசுவண்டி உரிமையாளர்களுக்கும் இடையே முறையற்ற போட்டியை தவிர்த்துக் கொள்வதற்குமாக முறையே 60% - 40% வீதாசாரத்தில் ஒருங்கிணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் நகர அலுவல்கள் பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு ஏ.எச்.எம்.பௌஸி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.