• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதுகாப்பானதென பரிசோதனை செய்யும் பொருட்டு பொல்கொல்ல மகாவலி சுரங்கவழி மற்றும் புதிய லக்‌ஷபான மின் நிலைய சுரங்கவழி ஆகியவற்றை மூடிவைத்தல்

- மகாவலி முறைமையின் பிரதான திசை திருப்பு சுரங்க வழியான பொல்கொல்ல சுரங்கவழி, வடமத்திய மாகாணத்திற்கு மகாவலி நீரை திருப்புவதற்காக 1976 ஆம் ஆண்டில் நிருமாணிக்கப்பட்டதாகும். இந்த சுரங்கவழி இறுதியாக 1986 ஆம் ஆண்டில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதோடு, இந்த சுரங்கவழி எவ்வித பரிசோதனையுமின்றி 20 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்ற புதிய லக்‌ஷபான மின் நிலைய சுரங்கவழி 1975 ஆம் ஆண்டிலிருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆதலால், இந்த சுரங்கவழிகளில் கட்டமைப்பு ரீதியிலான சேதங்கள் எதுவும் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான காலதாமதத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஏதேனும் அனர்த்த நிலைமையை தடுக்கும் பொருட்டு பொல்கொல்ல மற்றும் புதிய லக்‌ஷபான சுரங்கவழிகளை பரிசோதனை செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இரண்டு (02) வார காலம் தற்காலிகமாக மூடுவதற்கு தனது அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் இவ்வாறு மூடுவதனால் ஏற்படக்கூடிய பொருளாதார, சமூக பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.