2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரத்மலானை / மொரட்டுவை மற்றும் ஜா-எல / ஏக்கலை பிரதேசங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான வசதிகளை வழங்கும் கருத்திட்டத்தின் அதிகரித்த மதியுரைச் சேவைகளுக்கான செலவினத்தை ஈடுசெய்வதற்கு மேலதிக கொடைகளைப் பெற்றுக் கொள்ளல் - இரத்மலானை / மொரட்டுவை மற்றும் ஜா-எல / ஏக்கலை பிரதேசங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான கருத்திட்டம் சுவீடன் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இந்தக் கருத்திட்டத்தின் மதியுரைச் சேவைகளுக்குத் தேவையான மேலதிக நிதியை வழங்கும் பொருட்டு சுவீடன் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கைக்குச் செய்யப்படுகின்ற திருத்தத்திற்கு கைச்சாத்திடும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |