2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை வெளிநாட்டுப் வேலைவாய்ப்பு பணியகத்தின் தம்புள்ளையிலுள்ள பயிற்சி நிலையத்தை முழு வசதிகளுடன் கூடிய புலம்பெயர் வள நிலையமொன்றாக தரமுயர்த்துவதற்கான சேர்க்கைகளும் மாற்றங்களும் - 180 பயிலுநர்களுக்கு வதிவிட வசதிகளை வழங்குவதற்கும் 350 பயிலுநர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதிகளை உருவாக்குவதற்குமாக மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள புலம்பெயர் வள நிலையம் நவீன பிரிவுகளை சேர்த்தும் மாற்றங்களைச் செய்தும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான திருத்த வேலைகளைச் செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலனோம்பல் அமைச்சர் மாண்புமிகு டிலான் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |