2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் நிதியளிக்கப்படும் தேசிய வீதி வலையமைப்பின் பிரதான பாலத்தை நிருமாணிப்பதற்கான கருத்திட்டம் - மதியுரைச் சேவை - தேசிய வீதி வலையமைப்பின் பிரதான பாலங்களை நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் செலவுகளை ஏற்பதற்காக 12,381 மில்லியன் யப்பான் யென்களைக் கொண்ட கடன் தொகையொன்று யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதோடு, இந்தக் கருத்திட்டத்தின் கீழ் 37 பிரதான பாலங்கள் நிருமாணிக்கப்படவுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யயப்பட்டுள்ளவாறு மேற்போந்த கருத்திட்டத்திற்கு மதியுரைச் சேவை வழங்கும் ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |