• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எரிபொருள் நிரப்பகங்களைத் தாபிப்பதற்காக தெற்கு அதிவேகப் பாதையின் இளைப்பாறுகை மனையிடங்களில் உள்ள இரண்டு காணித் துண்டுகளை குத்தகைக்களிப்பதற்கு அங்கீகாரம் கோரல்

- தெற்கு அதிவேக பாதையின் இளைப்பாறுகை இடங்களுக்கு அருகாமையில் இனங்காணப்பட்டுள்ள இரண்டு (02) காணித் துண்டுகளை அரசாங்க பிரதான மதிப்பீட்டாளரினால் வழங்கப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைவாக எரிபொருள் நிரப்பகங்களைத் தாபிக்கும் பொருட்டு வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கூட்டிணைந்த கம்பனியொன்றுக்கு 30 வருட காலப்பகுதிக்கு குத்தகைக்களிப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.