2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடுதல் - 2013 - ஒவ்வொரு ஆண்டும் திசெம்பர் 26 ஆம் திகதி "தேசிய பாதுகாப்புத் தினமாக" பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதோடு, 2006 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஏழு (07) ஆண்டுகள் முறையே காலி, இரத்தினபுரி, கண்டி, குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு தேசிய பாதுகாப்புத் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இயைபுள்ள அமைச்சுக்களினதும் மாகாண சபைகளினதும் ஏனைய தரப்பினர்களினதும் செயற்பாட்டு ரீதியிலான பங்களிப்புடன் 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்புத் தினத்தை கொண்டாடு வதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் களுத்துறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்து வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |